கனடாவின் வான்கூவரில் திருவிழா கூட்டத்திற்குள் காரை வேகமாக ஓட்டி சென்று பலரை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். வான்கூவரில் பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் விதமாக ஏப்ரல் 27 ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவால் லாபு - லாபு தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஏராளமானோர் ஃப்ரேசர் தெருக்களில் கூடியிருந்தபோது ஒருவர் SUV காரை தாறுமாறாக ஓட்டி சென்று தாக்குதல் நடத்தினார். இதில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.