ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு தொடுத்த போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் சுமார் 15 ஆயிரம் வீரர்களை அனுப்பி வைத்தது. இது குர்ஸ்க் பிராந்தியத்தை மீட்க ரஷ்யாவுக்கு மிகவும் உதவியாக இருந்ததாக வடகொரியாவுக்கு புதின் நன்றி கூறினார். இந்தநிலையில் சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக வடகொரியா மீது தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது.