கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் காயமடைந்தனர். இது கடந்த 3 ஆண்டுகால போரில் ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. பறக்கும் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.