ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் தேங்கிய மழைநீர், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.