இரண்டாம் உலக போரில் மாய்ந்த வீரர்களின் எச்சங்களை ரஷ்ய தன்னார்வலர்கள் தேடி அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் உலக போரின் போது ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செம்படை வீரர்கள் கொத்து கொத்தாக போர் களத்திலேயே மாண்டு போயினர். இந்நிலையில் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வீரர்களின் எச்சங்களை கண்டறிந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.