அமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில், மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்க, சான் பிரான்சிஸ்கோவில் அல்காட்ராஸ் சிறைச்சாலை இருந்தது. 1963 இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், புளோரிடாவிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய டிரம்ப், நீண்ட காலமாக அமெரிக்கா, கொடூரமான மற்றும் வன்முறை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். தற்போது இச்சிறைச்சாலை சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடதக்கது.