அர்ஜென்டினா மற்றும் சிலி கடல் பகுதியில் 7 புள்ளி 4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பேரலைகள் எழுந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படும் நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.