மாலத்தீவில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்கவும், அவர்களுக்கு விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை பிடியில் சிக்காத அடுத்த தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இளம் தலைமுறைக்கு சிகரெட் விற்க தடை விதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.