பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, இரு நாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின. கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் மீது இந்திய விமானங்கள் பறந்து செல்லத் தடை விதித்து, அதற்கான வான்வழிப் பாதைகளை மூடி அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அந்த தடையானது மே 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஜூன் 24 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.