பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்ஜாக்கிரதையாக பாகிஸ்தான் வான்வழியை பல பன்னாட்டு விமான நிறுவனங்கள் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் அபாய சூழல் உள்ளதால், பாகிஸ்தான் வழியாக தங்களது விமானங்களை இயக்கவில்லை என ஏர் பிரான்ஸ், ஜெர்மனியின் லுப்தான்ஸா உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.