காசாவில் உணவகம் மற்றும் சந்தை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 23 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு, தற்போதுவரை இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுத வீடியோ வெளியாகி உள்ளது.