ஈரான் ஏவுகணைகள் மேற்கு கரை வழியாக இஸ்ரேலை நோக்கி வானில் பாய்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மேற்கு கரை வழியாக இஸ்ரேலை நோக்கி பாய்ந்ததைக் கண்ட பாலஸ்தீன மக்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.