சீனாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு 4.1 ரிக்டர் அளவு கோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.12 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 86.25 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.