Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான USS நிமிட்ஸ், தென்சீனக்கடற் பகுதியில் இருந்து அவசரம் அவசரமாக மேற்கு நோக்கி புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் சீனக்கடலில் நங்கூரமிட்டிருந்த இந்த விமானந்தாங்கி கப்பல், வியட்நாமுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்த தை தொடர்ந்து இந்த கப்பல் மேற்கில் பாரசீக வளைகுடா நோக்கி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் வியட்நாமின் Danang துறைமுகத்திற்கு செல்ல விருந்த கப்பலின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. மிகவும் அவசரமான ஒரு நடவடிக்கைக்காக இந்த கப்பல் புறப்பட்டு சென்று விட்டது என ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.