ஸ்காட்லாந்தில் கோர்கி இன நாய்களுக்கான ஓட்டப்பந்தயத்தில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் துள்ளிக்குதித்து கியூட்டாக ஓடின. மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக, அவருக்கு மிகவும் பிடித்த கோர்கி இன நாய்களுக்கு மட்டும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்ற நாய்க்கு, விளையாட்டு மற்றும் உணவு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.