இதுவரை இல்லாத வகையில் நீட் தேர்வு கேள்விகள் மிக கடினமாக இருந்ததற்கு கடந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720 க்கு720 மதிப்பெண்கள் எடுத்ததே காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதிய நிலையில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு கேள்வித்தாள் மிக மிக கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தின் கேள்விகள் மிகக் கடுமையாக இருந்ததாக கூறியிருந்தனர். இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் முழு மதிப்பெண் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கட் ஆப் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.