உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக பல்கலைகழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்களை நியமிக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 22 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்களுக்கு தற்போது துணைவேந்தர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்றுக்கும் ஏற்கனவே துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆளுநர் உடனான கருத்து மோதல் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.