நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீகிதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சொத்துவரி உயர்த்தப்பட்டதாகவும், அதன்பின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் எந்த சொத்துவரியும் உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.