மாநிலம் முழுவதும் உள்ள பட்டியலினத்தவர் மற்றும் அதன் உட்பிரிவுகள், கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த சர்வேயை கர்நாடக அரசு இன்று துவக்கியது. வீட்டுக்கு வீடு நடக்கும் இந்த சர்வே 60 நாட்களில் முடிக்கப்பட்டு அதன் பின்னர் பட்டியலினத்தவரின் 101 உட்பிரிவுகள் குறித்த கணக்கெடுப்பு நிறைவு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். ஒய்வு பெற்ற கர்நாடக நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் இந்த சர்வேயை நடத்தும் என அவர் தெரிவித்தார். இந்த சர்வேயில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், பட்டியலின உட்பிரிவுகளுக்கான உள்ஒதுக்கீடு முடிவு செய்யப்படும் எனவும் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். இந்த சர்வேயில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என சுமார் 60 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.