மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வரும் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இருநாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்க்கு திருமணம்..