தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூத்துடன் காணப்படும்,ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.