தமிழ்நாட்டில் வரும் அக்டோபரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும், அதற்கு முன்பாக வாக்குச்சாவடி சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்குச் சாவடியும் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணைய உத்தரவை அடிப்படையாக கொண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், உள்ள சுமார் 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.