பதாகைகள் வைக்க வேண்டிய அளவில் தான் சட்டம் ஒழுங்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், தென்காசியில் ரேஷன் கடை அருகே மனைவி கண்ணெதிரில் கணவர் கொலை, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.