இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஜூன் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 110 இலவச மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கான விவரங்களை அறிந்து கொண்டு இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாயும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.