நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.மசாஜ் சென்டர் உரிமையாளர் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கு விசாரணையின் போது, மசாஜ் செண்டரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக, வீடியோ பதிவு மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.