கோவில்கள் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சூழல் மாசடைவது தொடர்பாக தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியன பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் உள்ள பூரிமரத்தவ முனீஸ்வரர் கோவில் அருகே கடந்த 5 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும் விசாரணையை ஜூலை 15 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.