பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு அரசாணையின்படி அமைச்சுப் பணியாளர்களுக்கு இரண்டு சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அமைச்சுப் பணியாளர்களுக்கு இரண்டு சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதாகவும், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.