கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தனு. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அந்தப்பகுதியில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.