பெண்கள் கால்பந்தாட்டத்தில் திருநங்கைகள் விளையாட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகள் தடை விதித்துள்ளன. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.