ஒரே மைதானத்தில் அதிக சிக்சர் அடித்த 4 வது வீரர் என்ற சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 3 சிக்சர்களை பறக்க விட்டார். இதன் மூலம் வான்கடே மைதானத்தில் 102 சிக்சர்களை பதிவு செய்தார். இந்த பட்டியலில் பெங்களுரு அணி வீரர் விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார்.