ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். முன்னதாக நடைபெற்ற 2வது சுற்றில் லக்ஷயா சென், சக நாட்டு வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். இதில் பிரனாய் முதல் செட்டை 21-15 என கைப்பற்ற லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-18, 21-10 என்ற கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.