மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவரை வீசி முடிக்காததால், 20 வது ஓவரில் ஆடுகளத்தின் வெளிப்புற பகுதியில் ஒரு பீல்டரை கூடுதலாக நிறுத்தும் வாய்ப்பையும் குஜராத் அணி பறிகொடுத்தது. இந்த போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.