நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில் முத்துப்பல்லக்கு வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி கேரளா சேவா சங்கத்தினரால் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.