சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார். குள்ளம்பட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜையின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.