திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5 ம் நாள் விழாவில் மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 5 ஆம் நாள் விழா நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் மாலை மற்றும் பச்சைக்கிளி சூடி பல்லக்கில் எழுந்தருளி, கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வர உடன் சின்ன கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கில் பவனி வந்தார். இரு பல்லக்கில் வந்த உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.