தாலியை கழட்டி வைத்துவிட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கொளத்தூரில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு வந்த நாள் முதலே தொடர்ந்து குளறுபடிகள் தான் எனவும், கணவனே மனைவியின் தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு அனுப்பி வைக்கின்ற மிகப்பெரிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது என கூறினார்.