ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் தாம் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக் அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது என்றும் அதில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.