+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்ச்சி பெற தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம் எனவும், மீண்டும் நன்றாக புரிந்து, படித்து துணைத் தேர்வை அணுகுங்கள், நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள் எனவும் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.