முருக பக்தர்கள் மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்ய இந்துத்துவா சக்திகள் முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களிலும் ஏற்பட்டிருப்பது நல்ல திருப்பம் என்றார்.