ஜிஎஸ்டி வரியை 8 சதவீதம் என்ற ஒரே கட்டமாகவரையறுக்க வேண்டும் என மத்திய அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநாட்டில் பேசிய அவர், ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினார். தற்போது 5, 12 ,18 மற்றும் 28 சதவீதம் என 4 கட்டங்களாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதை மாற்றி, சிங்கப்பூரை போல ஒரே ஸ்லாப்பாக, அதாவது 8 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.