ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழ் மொழி சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்ததாக பேசிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும், ஆளுநர் அவர்களை பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது என்றார்.