அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார். ’ஒன்றுபட்ட அதிமுக’ என்ற முயற்சியில் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வந்ததாலும், 2025-ல் அதிமுக ஒன்றிணையும் என்று சில தினங்களுக்கு முன்பு வைத்திலிங்கம் பேட்டியளித்ததாலும், அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருவர் மீதும் திமுக அரசு வழக்குப்பதிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சீரழிந்து வருவதையும், தி.மு.க மீதான அதிருப்தியையும் மூடி மறைக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.