பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் முதலமைச்சருக்கு பதற்றம் ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இது எங்கள் கட்சி, நாங்கள் வெற்றி பெறுவதற்காக கூட்டணி அமைத்திருக்கிறோம் என்றும், 2026 தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறினார்.