அக்டோபர் 7 தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பாக ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இருந்து குழந்தைகள், மனைவியுடன் சுரங்க வழியாக தப்பிச்செல்லும் வீடியோ காட்சி வெளியானது. இஸ்ரேல் மீது 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் மூளையாக செயல்பட்ட நிலையில் தாக்குதலுக்கு முன்பாக போர்டபிள் தொலைக்காட்சி, தண்ணீர், தலையணைகள் மற்றும் மெத்தைகள் உட்பட உடமைகளை தூக்கிக்கொண்டு யாஹ்யா சின்வார் தன் குடும்பத்துடன் அவசர அவசரமாக சுரங்க பாதை வழியாக வெளியேறும் காட்சி வெளியாகியுள்ளது.