உலகப்புகழ் பெற்ற தபேலா கலைஞரான ஜாகிர் ஹுசைன் காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுவாசப் பை தொடர்பான பிரச்சனையால் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 1951 ல் மும்பையின் மாஹிம் பகுதியில் லெஜன்டரி தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் அல்லாரக்காவின் மகனாக ஜாகிர் ஹுசைன் பிறந்தார்.பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுளை அளித்து இந்திய அரசு அவரை கவுரப்படுத்தியுள்ளது. வாழ்நாளை சாதனையாளருக்கான சங்கீத நாடக அகாடமி விருது, ஒரே இரவில் 3 கிராமி விருதுகளை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர்.சுருள் சுருளான முடியுடன் பிரபல தேநீர் பிராண்டுக்காக அவர் தபேலா வாசிக்கும் விளம்பரப் படம் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.