பள்ளி மாணவர்களை சீரழிக்கும் கூல் லிப் போதைப் பொருளை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. போதைப் பொருட்கள் விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி பல்வேறு வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதைப் பொருட்கள் பயன்பாடே காரணம் என நீதிபதி கூறினார். மேலும், தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் கூல் லிப் எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் இருப்பதாக தெரிகிறது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.