மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, போர் காலத்தில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து பாதுகாப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். எதிரி நாட்டின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.