இந்திய பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால், தமிழகத்தின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறி இருப்பதாவது:இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இது, தமிழகத்தின் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக, ஜவுளி உற்பத்தி மையமான திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது. இந்த சூழலில் நமது தொழில்துறையை பாதுகாக்க உடனடி நிவாரணங்களை ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.