உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர். இதில் 6 குழந்தைகளும் அடங்குவர். வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சில இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.