அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பல கர்ப்பிணிகளும் அவர்களின் துணைவர்களும், சிசேரியன் மூலம் உடனடியாக குழந்தையை பிரசவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எட்டு அல்லது 9 மாதம் ஆனால் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும் என்ற நிலையில் ,பலர் அதற்கு முன்னதாகவே அதை செய்ய துணிந்துள்ளனர்.